இருளுக்குள் எரிகின்ற தீபம் | Eelam Song Lyrics - EELAM MUSIC

இருளுக்குள் எரிகின்ற தீபம் | Eelam Song Lyrics

 இருளுக்குள் எரிகின்ற தீபம்

இது இடி தாங்கும் போதெல்லாம் வேகும்

விடிவிற்கு ஒளி தூவும் பேர்கள்

இவர் வெளியாலே தெரியாத வேர்கள்

இது காலவரனும் பலநூறு முகவர்

இவரோடு படகில் பலவேறு வகைகள்

சிறைவாடுவோரும் திரை முடுவோரும்

உயிர் ஈந்தபேரும் என நீளுவோர்கள்

இருளுக்குள் எரிகின்ற தீபம்

இது இடி தாங்கும் போதெல்லாம் வேகும்

வெளியே இவர்கள் தெரியாவண்ணம் திரிவார்கள்

நாளை விடியும் போதும் சிலபேர் வெளியே தெரியார்கள்

பகையின் வாசல் படியைகூட தொடுவார்கள்

பகையின் வாசல் படியைகூட தொடுவார்கள்

எங்கள் பலமே இவரின் பலமென்றாகி விடுவார்கள்

இருளுக்குள் எரிகின்ற தீபம்

இது இடி தாங்கும் போதெல்லாம் வேகும்

குஞ்சுகள் தன்னை கூட்டி சென்று சேர்ப்பார்கள்

எங்கள் கூட்டுக்குள்ளும் குஞ்சினை வைத்து காப்பார்கள்

வஞ்சகம் காட்டி கொடுத்தால் உயிரை மாய்ப்பார்கள்

வஞ்சகம் காட்டி கொடுத்தால் உயிரை மாய்ப்பார்கள்

இவர்கள் வதையுறும் போதும் இரகசியம் தன்னை காப்பர்கள்

இருளுக்குள் எரிகின்ற தீபம்

இது இடி தாங்கும் போதெல்லாம் வேகும்

தமிழரின் தாகம் இவர்களிடம் சொல்லி போவார்கள்

எங்கள் முகவர்கள் என்றும் மனம்தளராமல் சிரிப்பார்கள்

விழ விழ எழுவார் எழுந்த பின்னாலும் நடப்பார்கள்

விழ விழ எழுவார் எழுந்த பின்னாலும் நடப்பார்கள்

பெரு வெற்றியின் பின்னே இவர்களும் பெரிதா இருப்பார்கள்

இருளுக்குள் எரிகின்ற தீபம்

இது இடி தாங்கும் போதெல்லாம் வேகும்

விடிவிற்கு ஒளி தூவும் பேர்கள்

இவர் வெளியாலே தெரியாத வேர்கள்

இது காலவரனும் பலநூறு முகவர்

இவரோடு படகில் பலவேறு வகைகள்

சிறைவாடுவோரும் திரை முடுவோரும்

உயிர் ஈந்தபேரும் என நீளுவோர்கள்

இருளுக்குள் எரிகின்ற தீபம்

இது இடி தாங்கும் போதெல்லாம் வேகும்

விடிவிற்கு ஒளி தூவும் பேர்கள்

இவர் வெளியாலே தெரியாத வேர்கள்

விடிவிற்கு ஒளி தூவும் பேர்கள்

இவர் வெளியாலே தெரியாத வேர்கள்